மார்ச் 6, 2011 வேல்முருகன் ஆல்
என்னுடைய தந்தை திரு. ச.வே. அருணாசலம் அவரது குடும்பத்தில் மிகவும் இளையவர். அவருடைய தந்தை கூ. பு. சண்முக வேலாயுதம் அவர் வாழ்ந்த கிராமத்தில் ஒரு தலைவர். எனது தந்தையின் தாய் வள்ளியம்மாள் இவர் எங்கள் தத்தாவிற்கு இரண்டாம் தாரம். தாத்தாவின் முதல் தாரத்தின் பெயர் பத்ரகாளி அவருக்கு ஒரே மகள் அவர்கள் பெயர் சந்தனமாரி.
எனது அப்பம்மை வள்ளியம்மாளின் ஐந்தாவது மகன் எனது தந்தை. எனது அப்பம்மைக்கு ஒரு அக்காள் உண்டு அவரது பெயர் தெரியாது. அவரது மகன் எனக்கு பெரியப்பா அவருக்குஎன்மீது பற்றுதல் உண்டு. அவரின் பெயரும் எனது தந்தையின் பெயரும் ஒன்று
1. திருமலை – அத்தை அவரது கணவர் சீனிவாசன்
2. கூ.ச.வே. சுப்ரமணி – பெரியப்பா அவரது மனைவி செல்லக்கனி
3.கூ.ச.வே. ஜான் பூமணி – பெரியப்பா அவரது மனைவி நீலம்பிகாவதி
4. மாரி – அத்தைஅவரது கணவர் இராமேஸ்வரன்
5. எனது தந்தை ச.வே. அருணாசலம் எனது தாய் சமுத்திரக்கனி
எனது தத்தாவின் தந்தை பெயர்கூ.சு. புதுமாடன் அவருக்கு எனது தத்தாவும் ஒரு மகளும் இருந்தனர். அந்த மகள் எனது தாய் வழி தாத்தா குடும்பத்தில் வாக்கப்பட்டுள்ளார். அதாவது எனது தாத்தாவிற்கு அவர் பெரியம்மா உறவு
எனது தாத்தாவின் தாத்தா பெயர் சுப்ரமணி. ஆம் இவரின் பெயரே எனது பெரியப்பாவின் பெயர். இதற்கு மேல்தொடர பெயர்கள் தெரியவில்லை. இதுவே சொத்துடைமையின் பலன்.
மேற்கண்டுள்ளவர்களில் எனது தாயும், பெரியம்மா செல்லக்கனியும் மற்றும் பெரியப்பா அருணாசலம் மட்டுமே தற்போது வாழ்ந்து வருகிறார்கள்.
13.083000
80.300000